லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: ராகுல் டிராவிட்

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுத்தால்தான் இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:42 pm IST

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுத்தால்தான் இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை. இதற்கு முன்பு விளையாடியவர்கள் இதுபோன்று வித்தியாசமான யுக்திகளை எப்போதாவது பயன்படுத்தி சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடுவார்கள். ஆனால், இந்த யுக்தியை தொடர்ச்சியாக தவறுகள் எதுவும் செய்யாமல் விளையாடுவது புதிதாக உள்ளது. ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை பலமுறை விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு ஆலி போப் அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடப்படுவதை கடந்த காலங்களில் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். தொடர்ச்சியாக அதுவும் வெற்றிகரமாக விளையாடுவது கடினமான ஒன்று. அதனை ஆலி போப் சிறப்பாக செயல்படுத்தினார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இது போன்ற சவாலை முதல் முறையாக சந்திக்கவில்லை. இதனை எப்படி திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக திட்டமிட்டு அடுத்தடுத்தப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.