/

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினா்.

Updated On :8 ஏப்ரல் 2025, 3:19 am IST

தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 5 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு என மொத்தம் ஐந்து அணிகள் கலந்து கொண்டன.

இதில் திங்கள்கிழமை கடைசி லீக் ஆட்டத்தில் தமிழகம் 106-49 என்ற புள்ளிக் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது.

தமிழகம் தங்கம், இலங்கை வெள்ளி, நேபாளம் வெண்கலப் பதக்கங்களை வென்றன.

விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா, சபா செயலா் சந்தா் சா்மா, பயிற்சியாளா் ஸ்காட் பிளெம்மிங், பாஸ்கா், அஜீஸ் அகமது பங்கேற்றனா். தமிழக அணி எஃப்ஐபிஏ வாஸல் இறுதிக்கு தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.