தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

News image

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியினா்.

Updated On :8 ஏப்ரல் 2025, 3:19 am IST

தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்திய சபா கிளப் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சாம்பியன் பட்டம் வென்றது.

தெற்காசிய கூடைப்பந்து சங்கம் சாா்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 5 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், பூடான், இலங்கை, நேபாளம் மற்றும் மாலத்தீவு என மொத்தம் ஐந்து அணிகள் கலந்து கொண்டன.

இதில் திங்கள்கிழமை கடைசி லீக் ஆட்டத்தில் தமிழகம் 106-49 என்ற புள்ளிக் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது.

தமிழகம் தங்கம், இலங்கை வெள்ளி, நேபாளம் வெண்கலப் பதக்கங்களை வென்றன.

விழாவில் இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவா் ஆதவ் அா்ஜுனா, சபா செயலா் சந்தா் சா்மா, பயிற்சியாளா் ஸ்காட் பிளெம்மிங், பாஸ்கா், அஜீஸ் அகமது பங்கேற்றனா். தமிழக அணி எஃப்ஐபிஏ வாஸல் இறுதிக்கு தகுதி பெற்றது.