ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர்.
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தின்போது ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர், வினிசியஸ் ஜுனியர் நடுவரின் மீது பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் தூக்கி வீசுவார்கள்.
Real Madrid players lost control last night as Jude Bellingham, Antonio Rüdiger and Lucas Vázquez saw red.
— Carol Radull (@CarolRadull) April 27, 2025
Rudiger was sent off for throwing an object toward the referee ð³ pic.twitter.com/XiX7iETgLz
நடுவரை அடிக்கவும் பாய்ந்த ரூடிகரை ரியல் மாட்ரிட் அணி உதவியாளர்கள் இழுத்துப் பிடித்தனர். பின்னர் அவரை திடலில் இருந்து வெளியேற்றினார்கள்.
இந்தப் போட்டியில் அன்டோனியோ ரூடிகர் (120+3’), லூகாஸ் வாஸ்கியூஸ் (120+3), ஜுட் பெல்லிங்ஹாம் (120+4’) ஆகியோருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
நடுவரைத் தாக்கில் 2 ஆண்டுகள் அல்லது 10-12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நடுவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் தண்டனை அதிகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான்செய்த செயலுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த இரவில் நான் செய்த செயலுக்கு எந்தவிதமான சாக்குப்போக்கும் தெரிவிக்க முடியாது. நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் பாதியில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடத் தொடங்கினோம்.
111-ஆவது நிமிஷத்திற்குப் பிறகு என்னால் எனது அணிக்கு உதவ முடியவில்லை. போட்டி முடியும் முன்பு நான் தவறு செய்துவிட்டேன்.
நடுவர், சங்கடப்படுத்திய மற்ற அனைவர்களுக்கும் நான் மீண்டும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ரூடிகர் பகிர்ந்த பதிவு. - படம்: இன்ஸ்டா / ரூடிகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பீலே ஜெர்ஸி ரூ.47 கோடிக்கு ஏலம்

கலைந்தது ரொனால்டோவின் கனவு
ஹாலந்த் அதிரடியில் நாா்வே அசத்தல்; பிரேஸில் அதிா்ச்சி!
மெஸ்ஸி என்னும் மாயாவி!
விடியோக்கள்

72 ஆவது தேசிய திரைப்பட விருது பெறும் தமிழ் திரைப்படங்கள்!

இறந்தும் வாழும் 5 ரூபாய் டாக்டர்! அவரது மகன் தொடரும் மக்கள் சேவை | Dr. Sarathraj | 5 Rupees doctor

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK



