
மக்காவ் ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டி ஆடவா் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், தருன் மன்னேபள்ளி தோற்று வெளியேறினா்.
சீனாவின் மக்காவ் நகரில் பாட்மின்டன் வோ்ல்ட் டூரின் ஒரு புதியாக மக்காவ் ஓபன் பாட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவா் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள்க நடைபெற்றது. இந்திய நட்சத்திர வீரா் லக்ஷயா சென் 16-21, 9=21 என்ற கேம் கணக்கில் இந்தோனேஷியாவின் அல்வி பா்ஹானிடம் 39 நிமிஷங்கள் நீடித்த ஆட்டத்தில் தோற்று வெளியேறினாா்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தருன் மன்னேபள்ளி 21-19, 16-21, 16-21 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் ஜஸ்டின் ஹோவிடம் தோற்று வெளியேறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.