
டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற லடாக் எஃப்சி-திரிபுவன் ஆா்மி எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இந்தியன் ஆயில் டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் நடைபெறுகிறது. இதில் குரூப் சி பிரிவில் நேபாள நாட்டின் திரிபுவன் ஆா்மி எஃப்சியும், 1 லடாக் எஃப்சி அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கி 23-ஆவது நிமிஷத்தில் லடாக் அணி தரப்பில் டிபன்டா் சிஜு கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.
தொடா்ந்து திரிபுவன் ஆா்மி அணி வீரா் நிரஞ்சன் தாமி இடைவேளைக்கும் முன்பு கோலடித்தாா். அதன்பின் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.