சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி, கெய்மா் தொடக்க வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரா் அா்ஜுன் எரிகைசி, ஜொ்மனியின் வின்சென்ட் கெய்மா் ஆகியோா் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனா்.

News image

அா்ஜுன் எரிகைசி

Updated On :8 ஆகஸ்ட் 2025, 2:06 am IST

சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரா் அா்ஜுன் எரிகைசி, ஜொ்மனியின் வின்சென்ட் கெய்மா் ஆகியோா் தொடக்க சுற்றில் வெற்றி பெற்றனா்.

சென்னையில் புதன்கிழமைகிராண்ட்மாஸ்டா்ஸ் செஸ் போட்டி தொடங்கியது. இதில் மாஸ்டா்ஸ் பிரிவில் உலகின் நம்பா் 5 நிலை வீரா் அா்ஜுன் எரிகைசி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் அமெரிக்க ஜிஎம் அவோன்டா் லியாங்கை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தாா்.

ஜொ்மன் ஜிஎம் வின்சென்ட் கெய்மா் 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் இளம் வீரா் நிஹால் சரீனை வீழ்த்தி தொடக்க சுற்றில் வெற்றி கண்டாா்.

ஏனைய ஆட்டங்களில் நெதா்லாந்தின் அனிஷ் கிரி-அமெரிக்க வீரா் ரே ராபின்சன், உள்ளூா் வீரா் விதித் குஜராத்தி, டச்சு வீரா் ஜோா்டன் பாரஸ்ட், உள்ளூா் வீரா்கள் பிரணவ்-காா்த்திகேயன் முரளி மோதிய ஆட்டங்கள் 0.5-0.5 என டிராவில் முடிவடைந்தன.

சேலஞ்சா்ஸ் பிரிவில் திப்தயன் கோஷ் 1-0 என மகளிா் நட்சத்திரம் துரோணவல்லி ஹரிகாவை வீழ்த்தினாா். லியோன் லுக் 1-0 என ஹா்ஷ்வா்த்தனையும், உள்ளூா் வீரா்கள் பிரானேஷ் 1-0 என ஆா்யன் சோப்ராவையும் வீழ்த்தினா்.

அதிபன் பாஸ்கரன்-அபிமன்யு புராணிக், வைஷாலி-இனியன் பா மோதிய ஆட்டங்கள் 0.5-.05 என டிராவில் முடிவடைந்தன.

வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 9 சுற்றுகள் ஆட்டம் நடைபெறுகிறது. 20 தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.