வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரியல் பெடிஸ், கோமா 1907 கால்பந்து அணி வீரர்கள் மோதிக்கொண்டது குறித்து...

News image

சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்... - படங்கள்: எக்ஸ் / பிஆர்ஃபுட்பால்

Updated On :7 ஆகஸ்ட் 2025, 3:15 pm IST

நட்பு ரீதியான போட்டியில் ரியல் பெடிஸ், கோமா 1907 கால்பந்து அணி வீரர்கள் மோதிக்கொண்டது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

ஸ்பெயினில் நேற்று நடந்த போட்டியில் ரியல் பெடிஸ், கோமா கால்பந்து அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் மாற்றி மாற்றி பௌல்களை செய்து வந்தார்கள். இது 45-ஆவது நிமிஷத்தில் சண்டையாக மாறியது.

இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டார்கள்.

முதல்பாதிக்கு சில நிமிஷங்களுக்கு முன்பு நடந்த இந்தப் போட்டியில் அதுவரை கோமா அணி 2-0 (4’, 36’) என முன்னிலை வகித்தது.

பின்னர், மீண்டெழுந்த ரியல் பெடிஸ் 55,62-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து சமன்படுத்தியது.

இறுதியில் ஸ்டாபேஜ் டைம் கடைசி நிமிடத்தில் (90’+2) கோமா அணியின் அஜோன் கோல் அடித்து அசத்தினார். 3-2 என ரியல் பெடிஸை கோமா வீழ்த்தியது.

நட்பு ரீதியான போட்டியில் இப்படியா? எதிரிகளை பழிவாங்குவது போல் அடித்துக்கொள்வது என சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Summary

The clash between Real Betis and Coma 1907 football teams in a friendly match has drawn severe criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.