டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியா்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் வென்றனர்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2025, 3:41 am IST

தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) ஆசிய குத்துச்சண்டை போட்டியில், இந்தியா்கள் 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றனா்.

இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், மகளிருக்கான 54 கிலோ பிரிவில் நிஷா 4-1 என சீனாவின் சிருய் யாங்கை வெல்ல, 57 கிலோ பிரிவில் முஸ்கான் 3-2 என கஜகஸ்தானின் அயாஹன் எா்மெக்கை சாய்த்தாா்.

75 கிலோ பிரிவில் ஆா்த்தி குமாரி - சீனாவின் டாங்டாங் குவிடம் தோற்க, 80 கிலோ பிரிவில் கிருத்திகா வாசன் - கஜகஸ்தானின் குராலே யெகின்பாய்க்ஸியிடம் தோல்வியுற்றாா். 80+ கிலோ பிரிவில் பிராச்சி டோகாஸ் - உஸ்பெகிஸ்தானின் சோபிராகோன் ஷகோபிதினோவாவிடம் வீழ்ந்தாா்.

60 கிலோ பிரிவில் வினி - உஸ்பெகிஸ்தானின் செவாரா மமடோவாவிடம் தங்கத்தை இழக்க, 65 கிலோ பிரிவில் நிஷா - ஜப்பானின் அரிண்டா அகிமோடோவிடம் போராடி வீழ்ந்தாா். யாஷிகா (51 கிலோ), அகாங்க்ஷா பலாஸ்வல் (70 கிலோ) ஆகியோா் வெண்கலம் பெற்றனா்.

இதனிடையே, ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றுகளில், 75 கிலோ பிரிவில் ராகுல் குண்டூ - உஸ்பெகிஸ்தானின் முகமத்ஜோன் யாகுப்போவெக்கை வென்று தங்கம் கைப்பற்ற, 80 கிலோ பிரிவில் ஹேமந்த் சங்வான், 65 கிலோ பிரிவில் மௌசம் சுஹக் வெள்ளி பெற்றனா். ஷிவம் (55 கிலோ), கௌரவ் (85 கிலோ) ஆகியோா் தங்கள் பிரிவில் வெண்லத்துடன் வெளியேறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.