சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

சூப்பர் கோப்பை: முதல்முறையாக வென்று வரலாறு படைத்தது பிஎஸ்ஜி!

யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி குறித்து...

News image

சூப்பர் கோப்பையுடன் பிஎஸ்ஜி அணியினர்...

Updated On :14 ஆகஸ்ட் 2025, 12:35 pm IST

யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி அணி பெனால்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.

இத்தாலியில் உள்ள ப்ளூஎனர்ஜி திடலில் யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியும் டோட்டன்ஹாம் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் டோட்டன்ஹாம் அணி (39’) 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், 48-ஆவது நிமிஷத்தில் இரண்டாவது கோல் அடித்து 2-0 என இருந்தது.

75 சதவிகித பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி எவ்வளவு முயன்றும் கோல் அடிக்க முடியாமல் இருந்தது. கடைசி 10 நிமிஷத்தில் ஆட்டமே மாறியது.

போட்டியின் 85-ஆவது நிமிஷத்தில் பிஎஸ்ஜியின் லீ காங் கோல் அடிக்க, ஸ்டாபேஜ் டைமில் 90+3ஆவது நிமிஷத்தில் மீண்டும் பிஎஸ்ஜியின் கோன்சோலோ ராமோஸ் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்.

இதனால் ஆட்டம் பெனால்டிக்குச் சென்றது. இதில் பிஎஸ்ஜி அணி 4-3 என வெற்றி பெற்றது.

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கிளப் முதல்முறையாக யுஇஎஃப்ஏ சூப்பர் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

Summary

PSG made history by winning the UEFA Super Cup final on penalties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.