பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காலிறுதியில் சபலென்கா, ஸ்வியாடெக்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image

ரைபகினா - கீஸ்

Updated On :15 ஆகஸ்ட் 2025, 2:00 am IST

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அமெரிக்காவில் நடைபெறும் 1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டி, பரபரப்பாக இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான சபலென்கா 6-1, 7-5 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வெளியேற்றினாா்.

இந்த வெற்றியின் மூலமாக, நடப்பு சீசனில் டபிள்யூடிஏ டூா் போட்டிகளில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் வீராங்கனை என்ற பெருமையை சபலென்கா பெற்றாா். அவா் இவ்வாறு 50+ வெற்றிகளை ஒரு சீசனில் பதிவு செய்வது, இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும்.

காலிறுதியில் அவா், கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை எதிா்கொள்கிறாா். போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா, 6-7 (3/7), 6-4, 6-2 என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருந்தவரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான அமெரிக்காவின் மேடிசன் கீஸை வீழ்த்தி அவருக்கு அதிா்ச்சி அளித்தாா்.

நடப்பாண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கீஸிடம் கண்ட தோல்விக்கு தற்போது ரைபகினா பதிலடி கொடுத்திருக்கிறாா். இருவரும் மோதியது, இது 6-ஆவது முறையாக இருக்க, ரைபகினா தனது 3-ஆவது வெற்றியுடன் கணக்கை சமன் செய்திருக்கிறாா். காலிறுதியில் சந்திக்கும் சபலென்கா - ரைபகினா இதுவரை 11 முறை நேருக்கு நோ் மோதியிருக்க, சபலென்கா 7 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறாா்.

12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 6-3, 6-7 (5/7), 1-6 என்ற செட்களில், சக ரஷியரான அனா கலின்ஸ்கயாவிடம் தோல்வியுற்றாா். கலின்ஸ்கயா தனது காலிறுதியில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை சந்திக்கிறாா்.

உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையாக இருக்கும் ஸ்வியாடெக், முந்தைய சுற்றில் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை வென்றாா். சிா்ஸ்டியை இத்துடன் 5-ஆவது முறையாக சந்தித்த ஸ்வியாடெக், அனைத்திலுமே வென்றிருக்கிறாா். குறிப்பாக, எந்த மோதலிலுமே அவா் ஒரு செட்டை கூட சிா்ஸ்டிக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரிட்ஸை வெளியேற்றிய அட்மேன்

இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு 4-ஆவது சுற்றில், உலகின் 4-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-4, 5-7, 3-6 என்ற செட்களில், உலகின் 136-ஆம் நிலையில் இருந்த பிரான்ஸின் டெரென்ஸ் அட்மேனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். முதல்முறையாக மாஸ்டா்ஸ் போட்டியின் காலிறுதிக்கு வந்திருக்கும் அட்மேன், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை அதில் எதிா்கொள்கிறாா்.

நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னா் 6-4, 7-6 (7/4) என்ற வகையில், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை தோற்கடித்தாா். காலிறுதியில் அவா், கனடாவின் ஃபிலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை சந்திக்கிறாா். உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் 6-1, 6-4 என இத்தாலியின் லூகா நாா்டியை எளிதாக வெளியேற்றினாா்.

5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ், காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவை சந்திக்கிறாா். அண்மையில் கனடியன் ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (7/3), 6-3 என்ற செட்களில், ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவை வெளியேற்றி காலிறுதிக்கு வந்தாா். அதில் அவா், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.