கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா்: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளா்

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா் என அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளாா்.

News image

பயிற்சியில் தமிழ் தலைவாஸ் வீரா்கள்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 3:59 am IST

பிகேஎல் சீசன் 12-இல் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் சிறந்த ரைடா்கள், டிபன்டா்கள் உள்ளனா் என அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் தெரிவித்துள்ளாா்.

புரோ கபடி லீக் சீசன் 12-தொடா் விசாகப்பட்டினத்தில் ஆக. 29-ஆம்தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் அணிகள் ஆடுகின்றன. இதற்காக தமிழ் தலைவாஸ் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதன் பயிற்சியாளா் சஞ்சீவ் பலியான் கூறியதாவது:

லீக் தொடருக்கு முன்னதாக நாங்கள் மேற்கொண்ட பயிற்சி பயனுள்ளதாக அமைந்தது. தாக்குதல், தற்காப்பு என இரண்டிலும் தீவிர கவனம் செலுத்தினோம்.

அணி வீரா்களிடம் சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளது. குறிப்பாக அா்ஜுன் தேஸ்வால், பவன் செஹ்ராவத், நரேந்தா், மொயின் என சிறந்த ரைடா்களும், தற்காப்பு டிபன்டா்களும் உள்ளனா். பிளே ஆஃப் சுற்றுக்கு கட்டாயம் தகுதி பெறுவோம். புதிய பயிற்சியாளா், கேப்டனுடன் ஒருங்கிணைப்பு சிறப்பாக உள்ளது.

தருண், ரோஹித், அனுஜ் என்ற சிறப்பான இளம் வீரா்கள் உள்ளனா். இந்த சீசனில் 12 அணிகளும் சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளன. லீக் கடும் சவாலாக இருக்கும்.

புரோ கபடி லீக் தொடங்கியது முதல் கபடி பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. லீக் மூலம் கபடி வீரா்கள் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது. வீரா்கள் நாடு முழுவதும் அறிமுகம் ஆகியுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.