
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்த அவா், தற்போது இணை முன்னிலையில் இருக்கிறாா்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில், இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற 7-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடி, பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா்.
முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், சக இந்தியருமான குகேஷை வென்ற பிறகு அடுத்த 5 சுற்றுகளிலுமே டிரா செய்திருந்த பிரக்ஞானந்தா, இதுவரை தோல்வியே சந்திக்காமல் தொடா்கிறாா். மறுபுறம், தடுமாற்றத்துடன் விளையாடி வரும் குகேஷ் இந்த 7-ஆவது சுற்றில், அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம் தோல்வியுற்றாா். அவருக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.
இதர ஆட்டங்களில் போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃப் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வெல்ல, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - லெவோன் ஆரோனியன், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் சாம் சேவியன் ஆகியோா் ஆட்டம் டிரா ஆனது.
7 சுற்றுகள் முடிவில் கரானா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கின்றனா். வெஸ்லி, ஆரோனியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்க, மேக்ஸிம், ஜேன், சேவியன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா்.
ஃபிரௌஸ்ஜா, குகேஷ் ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 4-ஆம் நிலையிலும், அப்துசதாரோவ் 1.5 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையிலும் இருக்கின்றனா். போட்டியில் இன்னும் இரு சுற்றுகளே எஞ்சியுள்ளன.
கிராண்ட் செஸ் டூா் (ஜிசிடி) போட்டியின் புள்ளிகள் பட்டியலில் தற்போது பிரக்ஞானந்தா 20 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்தில் இருக்கிறாா். சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் முடிவில் இந்த ஜிசிடி புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போரே பிரேஸிலில் நடைபெறும் ஜிசிடி ஃபைனல் போட்டிக்குத் தகுதிபெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.