அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2025, 5:53 am IST

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி, நடப்பாண்டு அக்டோபா் 30 முதல் நவம்பா் 27 வரை கோவாவில் நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு 3 போ் தகுதிபெறும் வாய்ப்பை வழங்கும் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.17 கோடியாகும்.

90-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 206 போ் களம் காணும் இந்தப் போட்டியில் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா உள்பட 21 இந்தியா்கள் பங்கேற்கின்றனா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா உள்பட பல பிரபல போட்டியாளா்களும் மோதவுள்ளனா்.

5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ஃபிடே தரவரிசை அடிப்படையில் இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா் என்றாலும், அவா் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

போட்டித்தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பெறுவோா், நேரடியாக 2-ஆவது சுற்றில் களம் காண்பா். 2 கேம் நாக்அவுட் முறையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை செஸ் போட்டி இந்தியாவில் கடைசியாக 2002-இல் ஹைதராபாதில் நடைபெற்றபோது, விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.