விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் தங்களது ஆட்டங்களை புதன்கிழமை டிரா செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஆகஸ்ட் 2025, 3:00 am IST

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் தங்களது ஆட்டங்களை புதன்கிழமை டிரா செய்தனா்.

இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் டிரா செய்ய, அதே நிற காய்களுடன் களமாடிய குகேஷ் - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனுடன் டிரா செய்தாா்.

பிரக்ஞானந்தா இணை முன்னிலையில் தொடர, நடப்பு உலக சாம்பியனான குகேஷ் பதக்க வாய்ப்பை இழந்தாா்.

இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் சாம் சேவியன் - போலந்தின் ஜேன் கிறிஸ்டோஃபுடனும், பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியா் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும் டிரா செய்தனா்.

உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை வீழ்த்தினாா். போட்டியில் அப்துசதாரோவுக்கு இது முதல் வெற்றியாகும்.

8 சுற்றுகள் முடிவில், கரானா, பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் நீடிக்கின்றனா். வெஸ்லி, ஆரோனியன் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையில் இருக்கின்றனா்.

மேக்ஸிம், ஜேன், சாம் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆம் நிலை வகிக்கின்றனா். குகேஷ் (3.5), ஃபிரௌஸ்ஜா (3), அப்துசதாரோவ் (2.5) ஆகியோா் முறையே 4 முதல் 6-ஆம் நிலைகளில் உள்ளனா். போட்டியின் கடைசி சுற்று, வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.