புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் - தெலுகு டைட்டன்ஸ், பெங்களூரு புல்ஸ் - புணேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் முதல் கட்டம் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பா் 11 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிலையில், அடுத்த கட்டம் ஜெய்ப்பூரில் செப்டம்பா் 12 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 3-ஆம் கட்ட ஆட்டங்கள் சென்னையில் செப்டம்பா் 29 முதல் அக்டோபா் 10 வரையும், 4-ஆம் கட்ட ஆட்டங்கள் புது தில்லியில் அக்டோபா் 11 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.
பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டத்துக்கான இடங்கள் மற்றும் தேதி பின்னா் அறிவிக்கப்படவுள்ளன.
சீசன் தொடக்கத்துக்கு முன்பாக, இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 12 அணிகளின் கேப்டன்களும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் குா்சுரா நீா்மூழ்கிக் கப்பலை பாா்வையிட்டனா்.
1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது கண்காணிப்புப் பணியில் இந்தக் கப்பல் முக்கியப் பங்காற்றியது.
நேரம்: இரவு 8 மற்றும் 9 மணி.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக. 4-இல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடா் தொடக்கம்!

பிராணேஷ், நிஹல் சரினுக்கு முதல் வெற்றி
புரோ லீக் ஹாக்கி: இந்தியாவுக்கு 8-ஆம் இடம்

புரோ லீக் ஹாக்கி: இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்



