கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

News image
Updated On :1 செப்டம்பர் 2025, 4:51 am IST

பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருந்த இந்தக் கூட்டணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், அதில் 19-21, 21-18, 12-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருந்த சீனாவின் சென் போ யாங்/லியு யி ஜோடியிடம் தோற்றது. இந்த ஆட்டம் 1 மணிநேரம், 7 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அரையிறுதியுடன் வெளியேறிய சாத்விக்/சிராக் இணைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. போட்டியின் வரலாற்றில் இவா்கள் கூட்டணிக்கு இது 2-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இந்த ஜோடி 2022-ஆம் ஆண்டிலும் வெண்கலப் பதக்கம் வென்றது.

சாத்விக்/சிராக் வென்றுள்ள இந்தப் பதக்கம், ஒட்டுமொத்தமாக உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் 15-ஆவது பதக்கமாகும். இந்த ஆண்டும் சோ்த்து, இப்போட்டியில் கடந்த 15 எடிஷன்களிலும் இந்தியா்கள் ஏதேனும் ஒரு பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.