உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எனது கணவர் கூடைப்பந்து விளையாடுகிறாரா? ஃபிஃபா விருதில் புறக்கணிக்கப்பட்ட ரஃபீனியாவின் மனைவி கேள்வி!

பார்சிலோனாவின் நட்சத்திர வீரருக்கு மறுக்கப்பட்ட ஃபிஃபா விருது குறித்து...

Raphinha with his wife Natalia.

தனது மனைவியுடன் ரஃபீனியா. - படம்: இன்ஸ்டா / நடாலியா ரோட்ரிகஸ்.

Published On :

ஃபிஃபா விருது :

பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியாவுக்கு ஃபிஃபாவின் விருதுகளில் புறக்கணிப்பு செய்யப்பட்டதால் அவரது மனைவி மிகுந்த கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

ஃபிஃபாவின் சிறந்த பிளேயிங் லெவன் அணியிலும் ரஃபீனியா தேர்வாகாதது கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சீசனில் பார்சிலோனா சாம்பியின்ஸ் லீக்கைத் தவிர மற்ற மூன்று கோப்பைகளை வென்று அசத்தியது. இதில் ரஃபீனியா மட்டுமே 34 கோல்கள், 23 அசிஸ்ட்டுகளைச் செய்திருந்தார்.

இவருக்கு பேலந்தோர் (தங்கப் பந்து) விருது கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டு, டாப் 3-இலும் வராமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஃபிஃபாவின் விருதுகளிலும் புறக்கணிப்பு நடந்ததால் அவரது ரசிகர்கள் உள்பட பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

ரஃபீனியாவின் மனைவி நடாலியா ரோட்ரிகஸ் இது குறித்து தனது கருத்தை ஆக்ரோஷமாக வெளியிட்டுள்ளார்.

அவர் தனது இன்ஸ்டா பதிவில், “ரஃபீனியா கால்பந்து விளையாடாமல், கூடைப்பந்து எதுவும் விளையாடுகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியிள்ளார்.

ஃபிபாவின் சிறந்த பிளேயிங் லெவன் 2025:

உஸ்மான் டெம்பெலே, லாமின் யமால், பெட்ரி, விடிங்கா, ஜுட் பெல்லிங்கம், பால்மெர், நூனோ மெண்டிஸ், வான் டிஜிக், பாச்சோ, ஹகிமி, டோனரூம்மா.

Summary

‘Is he a basketball player?’ – Barcelona star’s wife fumes over FIFPRO XI omission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.