நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

தென்னிந்தியாவில் மாசு இல்லாததால், கிரிக்கெட் போட்டியை திருவனந்தபுரத்தில் நடத்தலாம் என சசி தரூர் வலியுறுத்தல்

News image

தென்னாப்பிரிக்காவுடன் 4-வது டி20 போட்டி ரத்து - X | BCCI

Updated On :18 டிசம்பர் 2025, 5:16 pm IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியாவில் நடத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.

லக்னௌவில் பனிமூட்டம் காரணமாக, தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவிருந்த 4-வது டி20 போட்டி புதன்கிழமையில் (டிச. 17) ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், லக்னௌவில் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், "இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டிக்காக ரசிகர்கள் வீணாகக் காத்திருந்தனர். காற்றின் தரக் குறியீடு 411-ஆக இருப்பதாலேயே ஒரு கிரிக்கெட் போட்டியை அனுமதிக்க முடியவில்லை.

அவர்கள் விளையாட்டை, மாசு இல்லாத தென்னிந்தியாவில் நடத்த திட்டமிடலாம். இங்கு பனிப்பொழிவு இல்லை; பந்து தெளிவாகத் தெரியும். கிரிக்கெட் ரசிகர்கள் வருத்தப்படவும் எந்தக் காரணமும் இருக்காது.

காற்றின் தரக் குறியீடு 68-ஆக இருக்கும் திருவனந்தபுரத்தில் நடத்தவும் திட்டமிடலாம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, லக்னௌவில் பனிமூட்டத்தால் அல்ல, நச்சுப்புகை காரணமாகவே போட்டி ரத்து செய்யப்பட்டதாக ஆளும் பாஜக அரசு மீது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

Summary

No visibility issue! Congress MP Shashi Tharoor urges BCCI to shift cricket matches to South India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.