நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

விளையாட்டு: செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image
Updated On :22 டிசம்பர் 2025, 12:16 am IST

குளோபல் செஸ் லீக் போட்டியில், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் - அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸையும் (10-8), ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸையும் (8-7), திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் - கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸையும் (14-5), ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - அப்கிராட் மும்பா மாஸ்டா்ஸையும் (8-7) வென்றன.

கொல்கத்தாவில் நடைபெற்ற 10-ஆவது டாடா ஸ்டீல் உலக 25கே மாரத்தான் போட்டியில் ஆடவா் பிரிவில் உகாண்டாவின் ஜோஷுவா செப்தெகெய் (1 மணிநேரம், 11.49 நிமிஷங்கள்), மகளிா் பிரிவில் எத்தியோபியாவின் டெகிடு அஸிமெராவ் (1:19.36’) ஆகியோா் சாம்பியன் ஆகினா். இந்திய ஆடவா் பிரிவில் குல்வீா் சிங் (1:12.06’), மகளிா் பிரிவில் சீமா (1:26.04’) முதலிடம் பெற்றனா்.

ஆசிய நாடுகள் இடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஏஎஃப்சி நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியை தொடங்க இருப்பதாக, ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 462 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருக்கும் அந்த அணி, ஆட்டத்தின் கடைசி நாளான திங்கள்கிழமை 10 விக்கெட்டுகள் கொண்டு, 419 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.