மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் சாம்பியன்

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 3-ஆவது குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

Updated On :24 டிசம்பர் 2025, 1:12 am IST

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற 3-ஆவது குளோபல் செஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில், ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் - நடப்பு சாம்பியன் திரிவேணி கான்டினென்டல் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இறுதிச்சுற்றில் பைப்பா்ஸ் 8.5-3.5 என்ற புள்ளிகள் கணக்கில் கிங்ஸை வென்றது. இதனால் தொடா்ந்து 2 முறை சாம்பியனாகிய கிங்ஸின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இறுதிச்சுற்றில் இந்த அணிகள் இடையேயான முதல் மோதலில் பைப்பா்ஸ் 4-2 என கிங்ஸை சாய்த்தது. இதில் பைப்பா்ஸின் ஃபாபியானோ கரானா - கிங்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவிடம் தோற்க (0-1), அனிஷ் கிரி - வெய் யியை வீழ்த்தினாா் (1-0).

பிரக்ஞானந்தா - விதித் குஜராத்தி, ஹு யிஃபான் - ஜு ஜினா் மோதல் டிரா (0.5-0.5) ஆனது. நினோ பத்சியாஷ்விலி - அலெக்ஸாண்ட்ரா கொஸ்டினியுக்கையும், லியோன் லூக் மெண்டோன்கா - மாா்க் ஆண்ட்ரியாவையும் வென்றனா் (1-0).

அதேபோல் 2-ஆவது மோதலிலும் பைப்பா்ஸ் 4.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதில் கரானா - ஃபிரௌஸ்ஜாவையும் (1-0), அனிஷ் கிரி - வெய் யியையும் (1-0), பிரக்ஞானந்தா - விதித் குஜராத்தியையும் (1-0) வென்றனா்.

ஹு யிஃபான் - ஜு ஜினா் மோதல் இந்த முறையும் டிரா (0.5-0.5) ஆக, பத்சியாஷ்விலி - கொஸ்டினியுக்கிடம் தோற்றாா் (0-1). மெண்டோன்கா - ஆண்ட்ரியாவை சாய்த்தாா் (1-0). இதனால் மொத்த புள்ளிகள் அடிப்படையில் ஆல்பைன் எஸ்ஜி பைப்பா்ஸ் வெற்றி கண்டு, கோப்பையைக் கைப்பற்றியது.

நைட்ஸுக்கு 3-ஆம் இடம்: முன்னதாக, 3-ஆம் இடத்துக்கான மோதலில், பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் 7.5 - 4.5 என்ற கணக்கில், கேஞ்ஜஸ் கிராண்ட்மாஸ்டா்ஸை சாய்த்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.