பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

பழைய அணிக்கே திரும்பும் நெய்மர்..! சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேற்றம்!

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

News image

நெய்மர் - படங்கள்: எக்ஸ் / அல்-ஹிலால், நெய்மர்.

Updated On :28 ஜனவரி 2025, 3:34 pm IST

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் சௌதி அரேபிய லீக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.

சௌதி அரேபிய கிளப் அல்-ஹிலால் உடனான ஒப்பந்தம் இருவரின் சம்மதத்துடன் இன்று (ஜன.25) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதாகும் பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரொனால்டோவுக்குப் பிறகு அதிகம் கொண்டாடப்படுவராக இருக்கிறார்.

தொடர்ச்சியான காயங்கள் மட்டும் ஆகவில்லையெனில் உலகின் தலைசிறந்த வீரராகியிருப்பார். அதனால்தான் ரசிகர்கள் அவரை கால்பந்து உலகின் இளவரசன் என அழைக்கிறார்கள்.

எசிஎல் காயம்

அல்ஹிலால் கிளப்புக்காக 7 போட்டிகள் மட்டுமே விளையாடினார். அக்.2023இல் ஏசிஎல் காயம் காயத்தினால் அவதியுற்று வருகிறார். கடந்தாண்டில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பிஎஸ்ஜியிலிருந்து 94 மில்லியன் டாலருக்கு அல் ஹிலால் அணிக்கு வாங்கப்பட்டார். இதில் சேர்ந்த ஒரே மாதத்தில் எசிஎல் காயத்தினால் விளையாடமலிருந்தார்.

தாய் கிளப்பான சன்டோஷுக்கு திரும்பும் நெய்மர்

முதன்முதலாக சன்டோஷ் கிளப்பில் விளையாடிதான் நெய்மர் புகழ்பெற்றார். அதற்கு பிறகுதான் 2013இல் பார்சிலோனா அணிக்கு தேர்வாகி பல மறக்க முடியாத ஆட்டங்களை மெஸ்ஸியுடன் ஆடினார்.

கடந்த ஒரு வாரமாகவே சன்டோஷ் கிளப் ரசிகர்கள் நெய்மர் வருகைக்காக காத்திருக்கிறார்கள். பிரெசிலின் லெஜண்ட் பீலே கூறியதாக, “நம்.10 சீருடையை அணிந்து மீண்டும் சண்டோஷ் கிளப்பில் விளையாட வேண்டும்” என விருப்பம் தெரிவித்ததாக ஏஐ மூலம் விடியோ வெளியிட்டுள்ளார்கள்.

நெய்மர் சன்டோஷ் கிளப்பில் 6 பட்டங்களை வென்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நெய்மர், “எனக்கு பிளமெங்கோவில் விளையாட ஆசை. ஆனால், சன்டோஷ் எனது சிறுவயது கிளப் அணி. எனது வீடு மாதிரி” என்றார்.

சன்டோஷ் கிளப்பின் நிர்வாகி ஒருவர் ஊடகங்களில் நெய்மர் புதியதாக கால்பந்து அணியை வாங்குவதாகக் கூறியதை மறுத்தார். மேலும், சன்டோஷ் கிளப்பில் இணைய நெய்மர் விரும்பியதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.