நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!

போலந்து மகளிரணி ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் போலந்து வீராங்கனைகள். - படம்: ஏபி

Updated On :13 ஜூலை 2025, 1:32 pm IST

போலந்து கால்பந்து மகளிரணி முதல்முறையாக ஐரோப்பிய சாம்பியனில் வென்று வரலாறு படைத்துள்ளது.

போலந்து மகளிரணி ஐரோப்பிய சாம்பியன் குரூப் ஸ்டேஜ் போட்டியில் டென்மார் அணியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் 3-2 என போலந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக ஒரு பெரிய தொடரில் போலந்து மகளிரணி வென்றுள்ளது.

நேற்று போலந்து டென்னிஸ் வீராங்கனை முதல்முறையாக விம்பிள்டன் கோப்பை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய சாம்பியனுக்கு முதல்முறையாக தகுதிபெற்ற போலந்து அணி முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்றது.

குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் டென்மார்க் உடன் மோதியது. இதில் 13, 20-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து 2-0 என முன்னிலை வகித்தது.

மீண்டெழுந்த டென்மார்க் 59, 83ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் போலந்து 76-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-2 என வென்றது.

இது குறித்து போலந்து பயிற்சியாளர் நினா படோலன், “நாங்கள் ஒரு கோல் அடிக்க இருந்தோம், கடைசியில் 3 அடித்தோம். எங்கள் மகளிர் அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்” என்றார்.

நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறாவிட்டாலும் இந்த வெற்றி போலந்து அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.

Summary

Natalia Padilla scored one goal and set up the others for Poland’s first ever Women’s European Championship win, 3-2 over Denmark in their final group game on Saturday.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.