மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செல்ஸி வீரரைக் கீழே தள்ளிய பிஎஸ்ஜி பயிற்சியாளர்..! கடும் விமர்சனங்கள்!

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த மோதல் குறித்து...

News image

சண்டையில் கீழே விழும் ஜாவோ பெட்ரோ.

படம்: ஏபி

Updated On :14 ஜூலை 2025, 9:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த மோதல்கள் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. அதிலும் பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கடுமையான விமசர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் மோதின. இதில் பிஎஸ்ஜி அணியை 3-0 என செல்ஸி வென்றது.

இந்தப் போட்டியில் கடைசி சில நிமிஷங்கள் இரு அணிக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் செல்ஸி வீரர் ஜாவோ பெட்ரோவை கீழே தள்ளியது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.

பெட்ரோ கீழே விழுந்ததும் செல்ஸி வீரர்கள் பிஎஸ்ஜி வீரர்களை சூழ்ந்துக் கொண்டனர்.

பிஎஸ்ஜி கோல் கீப்பர் டோன்னரும்மாவை சூழ்ந்தார்கள். இரு அணியினருமே ஆக்ரோஷமாகப் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி வீரர் நெவேஸுக்கு 85-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

ஜாவோ பெட்ரோ இந்த மோதல் குறித்து, “ஆண்ட்ரே சன்டோஷை பிஎஸ்ஜி வீரர்கள் சூழத் தொடங்கினார்கள். அவரைப் பாதுகாக்கவே நான் முன்னாடி வந்தேன். கால்பந்தில் இதெல்லாம் சகஜம்தான்” எனப் பெருந்தன்மையாகப் பேசினார்.

பிஎஸ்ஜி வீரர் ஹகிமி செல்ஸி வீரர் ஆண்ட்ரே சன்டோஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் இந்த மோதலுக்கான உடனடி காரணமாக அமைந்தது.

பிஎஸ்ஜி அணியினரின் மோதல்போக்கு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கடுமையான விமசர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.