யூரோ மகளிர் கால்பந்து போட்டியில் இத்தாலி அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்குச் சென்றுள்ளது.
ஸ்டேட் டி ஜெனீவ் திடலில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நார்வே உடன் மோதிய இத்தாலி 2-1 என வென்றது.
இந்தப் போட்டியில் இத்தாலியின் கிறிஸ்டியானா கிரெல்லி 50ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, நார்வே அணியின் ஹெக்கர்பெர்க் 66-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

கிறிஸ்டியானா கிரெல்லி - படம்: ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை.
விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் 90-ஆவது நிமிஷத்தில் ஹெட்டர் அடித்த் இத்தாலியின் கிறிஸ்டியானா கிரெல்லி வெற்றிக்கு வித்திட்டார்.
வரலாற்று வெற்றி
இந்தப் போட்டியில் 51 சதவிகிதம் பந்தினை தனது கட்டுக்குள் வைத்திருந்த இத்தாலி அணி நார்வே அணியை விட குறைவான தவறுகளே செய்தது.
நார்வே அணி 10 பௌல்களைச் செய்ய இத்தாலி 2 மட்டுமே செய்திருந்தது.
இந்தப் போட்டியில், இலக்கை நோக்கி இத்தாலி 6 முறை அடிக்க, நார்வே 1 முறை மட்டுமே அடித்திருந்தது.
இந்த வெற்றியின் மூலமாக இத்தாலி அணி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து 35 வயதாகும் கிறிஸ்டியான கிரெல்லி கூறியதாவது:
இத்தாலி பெண்களுக்கு சமர்ப்பணம்
இது எங்களுக்கான வெற்றி மட்டுமல்ல, இத்தாலியில் கால்பந்து விளையாடும் அனைத்து பெண்களுக்குமானது.
இந்த வெற்றி அணியிலுள்ள 23 பெண்களுக்குமானது. ஆனால், இந்தப் போட்டியை வீட்டிலிருந்து பார்க்கும் வருங்கால அனைத்து இத்தாலி பெண்களுக்கும் இது சமர்ப்பணம்.
புதிய தலைமுறை அணிக்கு இந்த வெற்றி நம்பமுடியாதது. ஐரோப்பியாவில் நான்கில் ஒரு அணியாக இருப்பது கனவு நனவானதுபோல் இருக்கிறது என்றார்.
இத்தாலி நாட்டிற்காக, கிரெல்லி 61 கோல்களை அடித்துள்ளார். கடைசி 3 கோல்களை இதே திடலில் அடித்துள்ளார்.
போர்ச்சுகலுக்கு எதிராக 22 மீட்டர் துரத்தில் இருந்து இவர் அடித்த கோல் இந்தத் தொடரிலே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
Summary
The Italian team has reached the semi-finals of the Euro Women's Football Championship after 28 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









