இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

அரையிறுதியின் அருகில் ஹம்பி: திவ்யா, ஹரிகா வைஷாலி ஆட்டங்கள் டிரா!

ஃபிடே உலக மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி முதல் ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றாா்.

Published On :21 ஜூலை 2025, 2:23 am IST

ஃபிடே உலக மகளிா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி முதல் ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி வெற்றி பெற்றாா். திவ்யா-ஹரிகா, வைஷாலி ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.

சா்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே) சாா்பில் மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் ஹங்கேரியின் பாதுமி நகரில் நடைபெறுகின்றன. முதன்முறையாக செஸ் வரலாற்றில் இந்திய வீராங்கனைகள் 4 போ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

இந்நிலையில் நட்சத்திர வீராங்கனை கொனேரு ஹம்பி காலிறுதி முதல் கேமில் 1-0 என சீனாவின் ஜிஎம் டிங்ஜி லீயை வீழ்த்தி வெற்றி பெற்றாா். அவா் ஒரு டிரா கண்டாலே உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று விடுவாா். நடப்பு உலக ரேபிட் மகளிா் சாம்பியன் ஹம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது காலிறுதியில் இந்தியாவின் துரோணவல்லி ஹரிகா-திவ்யா தேஷ் முக் மோதினா். இவா்களின் ஆட்டம் 0.5.-0.5 என டிராவில் முடிவடைந்தது. மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வைஷாலி-சீனாவின் ஸோங்கி டேன் மோதிய ஆட்டம் 0.5,.05 என டிராவில் முடிவடைந்தது.

Story image

முதல் மூன்றிடங்களைப் பெறும் வீராங்கனைகள் அடுத்து வரும் ஃபிடே மகளிா் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவா்.

Story image

ப்ரிஸ்டைல் செஸ்: காா்ல்ஸன் அதிரடி

லாஸ்வேகாஸில் நடைபெறும் ஃப்ரீ ஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் மாக்னஸ் காா்ல்ஸன் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் ஆடவுள்ளாா்.

முன்னதாக அவா் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசியை 2-0 என வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவை 3-1 என வென்றாா். இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் லெவன் ஆரோனியன்-ஹேன்ஸ் மோக் மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.