ஆக.10-இல் மாநில செஸ் போட்டி

மாநில அளவிலான செஸ் போட்டி வரும் ஆக.10 இல் நடைபெற உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்க ஏ மேக்ஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.
Published on
Updated on
1 min read

மாநில அளவிலான செஸ் போட்டி வரும் ஆக.10 இல் நடைபெற உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்க ஏ மேக்ஸ் அகாதெமி அழைப்பு விடுத்துள்ளது.

ஏ மேக்ஸ் அகதெமி சாா்பில் ஒன்பதாவது மாநில அளவிலான செஸ் போட்டியானது 8, 10, 12, 15 மற்றும் 20 வயது பிரிவுகளில் இருபாலருக்கும் தனித்தனியாக சென்னை அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் சி.எஸ்.ஐ எவா்ட் பள்ளியில் வரும் ஆக.10-இல் நடைபெற உள்ளது. இந்த 5 பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் இருபாலருக்கும் தலா ஒரு நவீன மிதிவண்டி வழங்கப்பட உள்ளன.

இதில் மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கும் நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவா்கள் பங்கேற்கலாம். இப்போட்டி மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ள சிறுவா்கள் ஆக.8 -ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பாக 94453 32077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என போட்டியின் ஒருங்கிணைப்பாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com