கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!

கால்பந்து உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் குறித்து...

News image

உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள். - படம்: எக்ஸ் / ஃபிபா

Updated On :6 ஜூன் 2025, 4:50 pm IST

முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன.

ஃபிபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 48 அணிகள் தேர்வாக இருக்கின்றன. இதுவரை 10 அணிகள் தேர்வாகியுள்ளன.

இந்தமுறை முதல்முறையாக உலகக் கோப்பைக்கு ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தகுதிபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஜோர்டான் ஓமனுடன் மோதிய போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

உஸ்பெகிஸ்தான் அணி ஐக்கிய அரபுடன் மோதியதில் 0-0 என கோல்கள் அடிக்காமலே முடிவுக்கு வந்தன.

ஏஃப்சி (ஆசிய கால்பந்து கூட்டமைப்பு) சார்பாக இதில் மொத்தம் 47 அணிகள் இருக்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தேர்வாகும்.

தற்போதைக்கு இதிலிருந்து ஜப்பான், ஜோர்டான், கொரியா ரிபப்ளிக், ஈரான், உஸ்பெகிஸ்தான் என 5 அணிகள் உறுதியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.