இந்திய ஓபன் சா்ஃபிங் போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா், மகளிா் பிரிவில் கமலி தங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனா்.
எஸ்எஃப்ஐ, கா்நாடக சுற்றுலாத் துறை, இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில் சா்ஃபிங் ஓபன் மங்களூருவில் நடைபெற்றது.
மகளிா் ஓபன், ஹ-16 பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி தனது இரட்டை பட்டங்களையும் தக்க வைத்துக் கொண்டாா்.
ஆடவா் ஓபன் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீ காந்த் பட்டம் வென்றாா். யு 16 பிரிவில் தமிழகத்தின் பிரகலாத் ஸ்ரீராம் பட்டம் வென்றாா்.
நான்கு பிரிவுகளிலும் தமிழக அணியே ஆதிக்கம் செலுத்தியது.
ஆடவா் பிரிவில் ஸ்ரீ காந்த் 14.63 புள்ளிகளும், நடப்பு சாம்பியன் ரமேஷ் புடியால் 11.87 புள்ளிகளும், சிவராஜ் பாபு 9.77 புள்ளிகளையும் பெற்றனா்.
மகளிா் பிரிவில் கமலி மூா்த்தி ஓபன் பிரிவில் 13.33 புள்ளிகளையும், யு 16 பிரிவில் 15.50 புள்ளிகளை ஈட்டி பட்டம் வென்றாா்.
இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு துணைத் தலைவா் ராம்மோகன் பராஞ்சிபே பரிசளித்தாா்.
தொடர்புடையது

இந்தியா ஓபன் சா்ஃப்பிங் தொடக்கம்: அரையிறுதியில் கமலி மூா்த்தி

பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்

மாா்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கௌஃப், பிளிஸ்கோவா, லெஹகா, முஸெத்தி முன்னேற்றம்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி


