முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

மியாமி ஓபனில் சாதனை படைத்த இளம் பிலிப்பின்ஸ் வீராங்கனை!

மியாமி ஓபனில் அலெக்ஸாண்ட்ரா எலா அரையிறுதிக்கு முன்னேறினார்.

News image

அலெக்ஸாண்ட்ரா எலா - படம்: எக்ஸ் / மியாமி ஓபன்.

Updated On :27 மார்ச் 2025, 12:31 pm IST

பிலிப்பின்ஸ்ஸின் இளம் (19) வீராங்கனை மியாமி ஓபன் ஒற்றையர் மகளிர் காலிறுதியில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தினார்.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிலிப்பின்ஸ்ஸின் இளம் (19) வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா போட்டித் தரவரிசையில் 2ஆம் இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக்கை 6-2, 7-5 என வென்று அரையிறுத்திக்கு தகுதி பெற்றுள்ளார்.

19 வயதாகும் எலா வைல்டு கார்டு மூலம் டபிள்யூடிஏ 1000 இல் கலந்துகொண்டார். 140ஆவது தரவரிசையில் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு முன்னாள் கிராண்ட்ஸ்லாம் வீராங்கனைகளை வீழ்த்தி வருகிறார்.

தொடர்ச்சியாக மூன்று சுற்றுகளிலும் கிராண்ட்ஸ்லாம் வீராங்கனைகளை வீழ்த்தி அசத்தி வருகிறார்.

1 மணி நேரம் 37 நிமிஷங்கள் நடந்த இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் தனது முதல் டபிள்யூடிஏ அரையிறுதியில் எலா நுழைந்துள்ளார்.

மியாமி தொடருக்கு முன்பாக டாப்-40க்குள் யாரையும் எலா வென்றதில்லை. ஆனல், இங்கு டாப்-10இல் இருந்த மூவரை வென்று அசத்தியுள்ளார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் பெகுலாவை எலா சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.