திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏடிபி மாஸ்டர்ஸில் புதிய சாதனை படைத்த ஜோகோவிச்!

நோவக் ஜோகோவிச் மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

News image

நோவக் ஜோகோவிச் - படம்: ஏபி

Updated On :28 மார்ச் 2025, 10:42 am IST

செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதன்மூலம் புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச் செபாஸ்டியன் மியாமி காலிறுதியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் மிகவும் வயதான ஒருவர் ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்றவராக ஜோகோவிச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்பாக 37 ஆண்டுகள் 7 மாதங்களில் ரோஜர் பெடரர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

தற்போது ஜோகோவிச் 37 ஆண்டுகள் 10 மாதங்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் 84 சதவிகிதம் முதல் செர்வில் வெற்றி பெற்றார் ஜோகோவிச்.

அடுத்ததாக அரையிறுதியில் ஜோகோவிச் இந்திய நேரப்படி நாளை (மார்ச்.29) காலை பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.