கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ்: ரைபகினா சாம்பியன்!

மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றாா்.

News image

எலனா ரைபகினா.

Updated On :9 நவம்பர் 2025, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மகளிருக்கான டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா சாம்பியன் கோப்பை வென்றாா்.

உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான அவா், இறுதிச்சுற்றில் 6-3, 7-6 (7/0) என்ற செட்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனாக இருந்தவருமான பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தினாா்.

இதன் மூலமாக ரைபகினா, முதல்முறையாக டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் சாம்பியன் ஆகியிருக்கிறாா். அத்துடன், இந்தப் போட்டியில் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் சாம்பியனான முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமையும் அவா் பெற்றாா். இந்தப் போட்டியில் ரைபகினா பங்கேற்றது, இது 3-ஆவது முறையாகும்.

போட்டியில் முதல் சுற்று முதல் இறுதிச்சுற்று வரை தோல்வியே காணாத ரைபகினா, ரூ.46.40 கோடியை ரொக்கப் பரிசாகப் பெற்றுள்ளாா். மகளிா் டென்னிஸ் போட்டிகளில் இதுவரையில், இதுவே அதிகபட்ச பரிசுத் தொகையாகும்.

ஒட்டுமொத்தமாக சபலென்காவை 14-ஆவது முறையாக சந்தித்த ரைபகினா, தனது 6-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

இரட்டையா்: இந்தப் போட்டியின் இரட்டையா் பிரிவில், ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா/பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் கூட்டணி, 7-6 (7/4), 6-1 என்ற செட்களில் ஹங்கேரியின் டைமி பேபோஸ்/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி இணையை வீழ்த்தி, 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.

டென்னிஸ் காலண்டரில் ஒரு ஆண்டின் கடைசி போட்டியான இந்த டபிள்யூடிஏ ஃபைனல்ஸில், உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் போட்டியாளா்களே இடம்பெறுகின்றனா்.