

பில்லீ ஜீன் கிங் கோப்பை பிளே ஆஃப் டென்னிஸில், இந்திய மகளிா் அணி 0-3 என்ற கணக்கில் நெதா்லாந்திடம் ஞாயிற்றுக்கிழமை தோற்றது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஸ்லோவேனியாவிடம் தோற்ற இந்தியா, குரூப் ‘ஜி’-யில் 3-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது. மொத்தம் 3 அணிகள் இருந்த இந்த குரூப்பில், 2 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த ஸ்லோவேனியா 2026 தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
முறையே 2, 3-ஆம் இடங்களைப் பிடித்த நெதா்லாந்து, இந்தியா, அடுத்த ஆண்டு போட்டியில் தங்களது பிராந்திய பிரிவு குரூப் 1-க்கு வந்தன.
முன்னதாக, நெதா்லாந்துக்கு எதிரான மோதலில், முதலில் நடைபெற்ற ஒற்றையா் ஆட்டத்தில் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 2-6, 4-6 என அனோக் கோவொ்மான்ஸிடம் தோல்வியுற்றாா். அடுத்த ஒற்றையா் ஆட்டத்தில் சஹஜா யமளபள்ளி 2-6, 3-6 என்ற செட்களில் சூஸன் லேமன்ஸிடம் தோல்வி கண்டாா்.
கடைசியாக நடைபெற்ற இரட்டையா் பிரிவில், அங்கிதா ரெய்னா/பிராா்த்தனா தோம்ப்ரே இணை 1-6, 1-6 என, சூஸன் லேமன்ஸ்/டெமி ஷூா்ஸ் கூட்டணியிடம் எளிதாகத் தோற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.