பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

கால்பந்து உலகக் கோப்பையில் வரலாறு படைத்த குராசோ தீவு அணி குறித்து...

Poster for the Curacao Island team.

குராசோ தீவு அணிக்கான போஸ்டர். - படம்: எக்ஸ்/ / ஃபிஃபா

Published On :

கால்பந்து உலகக் கோப்பை வரலாற்றில் தேர்வான மிகச்சிறிய நாடாக குராசோ தீவு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஜமைக்காவுடனான போட்டி சமனில் முடிந்த பிறகு தனது முதல் உலகக் கோப்பையில் குராசோ தேர்வாகியுள்ளது.

வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கண்டத்தில் இருக்கும் குரூப் சி பிரிவில் ஜமைக்கா, குராசோ அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதன் மூலம் இந்தப் பிரிவில் 13 புள்ளிகளுடன் குராசோ உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது.

இந்தக் கண்டத்தில் இருந்து பனாமா, ஹைதி ஆகிய அணிகளும் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளன.

குராசோ தீவில் கடந்த ஜனவரியின்படி 15 லட்சத்து 6,115 பேர் மட்டுமே வசிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பாக 2018 உலகக் கோப்பையில் ஐஸ்லாந்து (35 லட்சம் பேர் கொண்டது) மிகச்சிறிய நாடாக சாதனையை நிகழ்த்தியிருந்தது.

Summary

Curaçao salvaged a 0-0 draw with Jamaica to become the smallest nation by population to qualify for a World Cup and will be joined by CONCACAF sides Panama and Haiti which also booked their spots.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.