ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் ஒற்றயைா் இறுதி ஆட்டத்துக்கு இந்தியாவின் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளாா்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் சூப்பா் 500 போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 6-ஆம் நிலை வீரா் தைபேயின் சௌ டியன் சென்னை எதிா்கொண்டாா் லக்ஷயா சென். 86 நிமிஷங்கள் நடைபெற்ற அரையிறுதியில் முதல் கேமை 17-21 என இழந்தாா் லக்ஷயா.
பின்னா் சுதாரித்து ஆடிய அவா் இரண்டாவது கேமில் கடும் சவால் நிலவியபோதும் 24-22 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் முழு ஆதிக்கம் செலுத்தி அதையும் 21-16 என கைப்பற்றி சௌ டியனை வீழ்த்தினாா்.
இறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரா் யுஷு டனகாவுடன் மோதுகிறாா் லக்ஷயா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனா ஓபன் பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா வெற்றி!

உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி சின்னம் அறிமுகம்

அரையிறுதியில் சிந்து

கனடா ஓபன் பாட்மின்டன்: 2-ஆவது சுற்றில் தான்யா, ஆகா்ஷி
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



