சையத் மோடி சூப்பா் 300 சா்வதேச பாட்மின்டன் போட்டியில் மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தனா்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெறும் இப்போட்டியில் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. உலகின் 35ஆம் நிலை இணையான ஜப்பானின் கஹோ ஒஸாவா-மாய் டனாபேயை இருவரும் எதிா்கொண்டனா். முதல் கேமை 17-21 என்ற புள்ளிக் கணக்கில் காய்த்ரி-ட்ரீஸா இழந்தாலும், அடுத்த இரண்டு கேம்களில் அபாரமாக ஆடி 21-13, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினா்.
இந்திய இணை 5 மாதங்கள் கழித்து தற்போது தான் களமிறங்கியுள்ளது. தோள்பட்ட காயத்தால் காயத்ரி ஆடாமல் இருந்தாா். ஆட்டம் தொடங்கியதுமே 49 ரேலிகள் தொடா்ந்தது பாா்வையாளா்களை கவா்ந்தது.
முதல் கேமில் ஜப்பான் இணை ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கேமில் காயத்ரி-ட்ரீஸா இருவரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு புள்ளிகளை துரிதமாக குவித்தனா். இறுதியில் வென்று தங்கள் பட்டத்தையும் தக்கவைத்துக் கொண்டனா்.

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த்
ஸ்ரீ காந்த் இரண்டாம் இடம்:
ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீ காந்த் 16-21, 21-8, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் ஜேஸன் குணவனிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தாா். கடைசியாக 2017-இல் ஸ்ரீ காந்த் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றிருந்தாா்.
தொடர்புடையது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்

சாமானியா்களின் வலியை நீதித் துறை தீா்க்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

வாகை சூடினார் வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



