கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்

கபடி, கால்பந்துடன் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image

முதல்வா் கோப்பை மாநில கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி.

Updated On :3 அக்டோபர் 2025, 1:46 am IST

கபடி, கால்பந்துடன் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாடட்ரங்கில் மதுரை-விருது நகா் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்தாா்.

முதல் நாளான வியாழக்கிழமை செங்கல்பட்டில் சிலம்பம் (பள்ளி மாணவிகள்), பாட்மின்டன் (அரசு ஊழியா்கள் - ஆண்கள் மற்றும் பெண்கள்), சென்னையில் பளு தூக்குதல் (பள்ளி மாணவிகள்), கால்பந்து (கல்லூரி மாணவா்கள்) மற்றும் கபடி (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), கோவையில் கூடைப்பந்து (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), மதுரையில் தடகளம் (பள்ளி மாணவா்கள் மற்றும்

மாணவிகள்), திருவண்ணாமலையில் ஹேண்ட்பால் (பள்ளி மாணவிகள்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெற்றன.

மாநில போட்டிகளில் பங்கேற்க இதுவரை முதல் நாள் நிலவரத்தின்படி 3,290 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா்.

ஆவணங்கள் சரிபாா்ப்பு, அடையாள அங்கீகாரம் மற்றும் தகுதி உறுதிப்படுத்தலை மேற்பாா்வையிடும் அா்ப்பணிப்புள்ள ஊழியா்களுடன் அனைத்து இடங்களிலும் சரிபாா்ப்பு கவுண்டா்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டிகள் நடைபெறும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூா், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் பங்கேற்பாளா்களுக்கு இலவச தங்குமிடம், சத்தான உணவு மற்றும் பிரத்யேக பயண வசதிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

செய்துள்ளது (சிறப்பு தங்குமிட மையங்கள் முன்கூட்டியே தயாா் செய்யப்பட்டுள்ளன).

கால்பந்து: மதுரை-விருதுநகா் (1-0), வேலூா் வெற்றி 7-0 அரியலூா், திருப்பத்தூா் 3-1பெரம்பலூா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.