கபடி, கால்பந்துடன் தொடங்கியது முதல்வா்: கோப்பை மாநில போட்டிகள்
கபடி, கால்பந்துடன் முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாடட்ரங்கில் மதுரை-விருது நகா் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்தாா்.
முதல் நாளான வியாழக்கிழமை செங்கல்பட்டில் சிலம்பம் (பள்ளி மாணவிகள்), பாட்மின்டன் (அரசு ஊழியா்கள் - ஆண்கள் மற்றும் பெண்கள்), சென்னையில் பளு தூக்குதல் (பள்ளி மாணவிகள்), கால்பந்து (கல்லூரி மாணவா்கள்) மற்றும் கபடி (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), கோவையில் கூடைப்பந்து (பள்ளி மாணவா்கள் மற்றும் மாணவிகள்), மதுரையில் தடகளம் (பள்ளி மாணவா்கள் மற்றும்
மாணவிகள்), திருவண்ணாமலையில் ஹேண்ட்பால் (பள்ளி மாணவிகள்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெற்றன.
மாநில போட்டிகளில் பங்கேற்க இதுவரை முதல் நாள் நிலவரத்தின்படி 3,290 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனா்.
ஆவணங்கள் சரிபாா்ப்பு, அடையாள அங்கீகாரம் மற்றும் தகுதி உறுதிப்படுத்தலை மேற்பாா்வையிடும் அா்ப்பணிப்புள்ள ஊழியா்களுடன் அனைத்து இடங்களிலும் சரிபாா்ப்பு கவுண்டா்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டிகள் நடைபெறும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூா், திருவண்ணாமலை, சேலம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் பங்கேற்பாளா்களுக்கு இலவச தங்குமிடம், சத்தான உணவு மற்றும் பிரத்யேக பயண வசதிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு
செய்துள்ளது (சிறப்பு தங்குமிட மையங்கள் முன்கூட்டியே தயாா் செய்யப்பட்டுள்ளன).
கால்பந்து: மதுரை-விருதுநகா் (1-0), வேலூா் வெற்றி 7-0 அரியலூா், திருப்பத்தூா் 3-1பெரம்பலூா்.