விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மெஸ்ஸி சாதனைக்கு அருகில் இருக்கும் எர்லிங் ஹாலண்ட் குறித்து...

Leo Messi, Erling Haaland.

லியோ மெஸ்ஸி, எர்லிங் ஹாலண்ட். - படங்கள்: ஏபி, மான்செஸ்டர் சிட்டி.

Published On :

மான்செஸ்டர் சிட்டி அணியின் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் (25 வயது) மெஸ்ஸியின் சாதனைக்கு மிக அருகில் இருக்கிறார்.

குறைவான போட்டிகளில் வேகமாக கோல் அடிக்கும் பட்டியலில் எர்லிங் ஹாலண்ட் முன்னேறி வருகிறார்.

சாம்பியன்ஸ் லீக்கில் அதிவேகமாக 50 கோல்களை அடித்து எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 62 போட்டிகளில் ரூட் வன் நிஸ்டெல்ராய் அடித்திருந்தார்.

இருப்பினும் இளம் வயதில் 50 சாம்பியன்ஸ் லீக் கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியே (24 ஆண்டுகள், 284 நாள்கள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

அடுத்ததாக, மெஸ்ஸி அதிவேகமாக 80 போட்டிகளில் 60 கோல்களை அடித்தும் அசத்தியுள்ளார்.

இத்துடன் 70, 80, 90, 100 போட்டிகளில் அதிவேகமாகவும், இளம் வயதிலும் முதலிடம் பிடித்த பட்டியலில் மெஸ்ஸியே இருக்கிறார்.

அதிவேகமாக 80 கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மட்டுமே மெஸ்ஸி இரண்டாம் இடம் வகிக்கிறார். லெவண்டாவ்ஸ்கி இதில் முதலிடம் பிடித்துள்ளார்.

தற்போது, எர்லிங் ஹாலண்ட் 50 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். அடுத்ததாக, அதிவேகமாக 60 கோல்கள் அடித்த மெஸ்ஸி சாதனையை முறியடிக்க இவருக்கு நல்ல வாய்பிருக்கிறது.

நார்வே நாட்டைச் சேர்ந்த ஹாலண்ட் தேசிய, கிளப்பின் கடைசி 10 போட்டிகளில் 17 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Having set a new Champions League record last time out, Erling Haaland is fast approaching another.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.