நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருவது குறித்து மெஸ்ஸி பேசியாதவது...

News image

லியோனல் மெஸ்ஸி. - படம்: இன்ஸ்டா / லியோ மெஸ்ஸி.

Updated On :2 அக்டோபர் 2025, 1:01 pm IST

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருவது குறித்து கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தான் மிகவும் கௌரவமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியில் கேரளாவில் விளையாட இருக்கிறார்.

கொல்கத்தாவில் வரும் டிச.13ஆம் தேதி வரும் மெஸ்ஸி அகமதாபாத், மும்பை, தில்லிக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். கடைசியாக டிச.15ஆம் தேதி பிரதமரைச் சந்தித்து பேசவிருக்கிறார்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் மெஸ்ஸியின் நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 25 அடி உயர சிலையை திறக்கபட இருக்கிறது.

இதற்கான டிக்கெட் விலை ரூ.3,500 இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2011-இல் மெஸ்ஸி கொல்கத்தாவில் விளையாடி இருந்தார்.

மும்பையில் கோட் கோப்பையில் சச்சின், தோனி, ஷாருக்கான் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருவது குறித்து மெஸ்ஸி பேசியதாவது:

இந்த கோட் டூர் ஆஃப் இந்தியா 2025-இல் பங்கேற்பது எனக்கு மிகுந்த கௌரவமாக நினைக்கிறேன்.

இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த நாடு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்த நல்ல நினைவுகள் எனக்குள் இருக்கின்றன.

இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியா, கால்பந்து ஆர்வமுள்ள நாடு. அழகான இந்தக் கால்பந்து மீதிருக்கும் எனது அன்பைப் பகிரும்போது புதிய தலைமுறை கால்பந்து ரசிகர்களை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.

நட்பு ரீதியான போட்டியில் விளையாட கேரளாவுக்கு, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.