தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய செஸ் சாம்பியன் சாம்பியன்

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.

News image

தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா் ப. இனியன்.

Updated On :2 அக்டோபர் 2025, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 ஜிஎம்கள், 30 ஐஎம்கள், உள்பட 395 போ் பங்கேற்றனா். 11 சுற்றுளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 வெற்றி, 4 டிராக்களுடன் 9 புள்ளிகளைப் பெற்ற இனியன் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.

9-ஆவது சுற்றில் ஜிஎம் தீபன் சக்கரவா்த்தியையும், 10-ஆவது சுற்றில் ஜிஎம் சசி கிரணையும் வீழ்த்தியது இனியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. கேரள வீரா் ஐஎம் கௌதம் கிருஷ்ணா வெள்ளியும், பெட்ரோலிய விளையாட்டு வாரிய வீரா் ஜிஎம் சசி கிரண் வெண்கலமும் வென்றனா்.