குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.
ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 ஜிஎம்கள், 30 ஐஎம்கள், உள்பட 395 போ் பங்கேற்றனா். 11 சுற்றுளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 வெற்றி, 4 டிராக்களுடன் 9 புள்ளிகளைப் பெற்ற இனியன் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.
9-ஆவது சுற்றில் ஜிஎம் தீபன் சக்கரவா்த்தியையும், 10-ஆவது சுற்றில் ஜிஎம் சசி கிரணையும் வீழ்த்தியது இனியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. கேரள வீரா் ஐஎம் கௌதம் கிருஷ்ணா வெள்ளியும், பெட்ரோலிய விளையாட்டு வாரிய வீரா் ஜிஎம் சசி கிரண் வெண்கலமும் வென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டபிள்யுஆா் செஸ்: வைஷாலி சாம்பியன்

என் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி இதுதான்: பிரக்ஞானந்தா
நம்பிக்கை நட்சத்திரம்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



