நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேசிய செஸ் சாம்பியன் சாம்பியன்

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.

News image

தேசிய சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரா் ப. இனியன்.

Updated On :3 அக்டோபர் 2025, 1:54 am IST

குண்டூரில் நடைபெற்ற 62-ஆவது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரா் ஜிஎம் ப. இனியன் பட்டம் வென்றாா்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் கடந்த செப். 21 முதல் அக். 1 வரை தேசிய செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 14 ஜிஎம்கள், 30 ஐஎம்கள், உள்பட 395 போ் பங்கேற்றனா். 11 சுற்றுளாக நடைபெற்ற இப்போட்டியில் 7 வெற்றி, 4 டிராக்களுடன் 9 புள்ளிகளைப் பெற்ற இனியன் தங்கப் பதக்கத்துடன் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினாா்.

9-ஆவது சுற்றில் ஜிஎம் தீபன் சக்கரவா்த்தியையும், 10-ஆவது சுற்றில் ஜிஎம் சசி கிரணையும் வீழ்த்தியது இனியனுக்கு முன்னிலை பெற்றுத் தந்தது. கேரள வீரா் ஐஎம் கௌதம் கிருஷ்ணா வெள்ளியும், பெட்ரோலிய விளையாட்டு வாரிய வீரா் ஜிஎம் சசி கிரண் வெண்கலமும் வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.