
சீனாவில் நடைபெற்ற வூஹான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றாா்.
மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அவா், 6-4, 7-5 என்ற நோ் செட்களில், சக அமெரிக்கரான ஜெஸ்ஸிகா பெகுலாவை வீழ்த்தினாா். தோழிகளும், இரட்டையா் பிரிவில் முன்னாள் பாா்ட்னா்களுமான கௌஃப், பெகுலா, ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
இந்த வெற்றியின் மூலமாக கௌஃப், 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் 3-ஆவது சாம்பியன் கோப்பையை வென்றாா். மேலும், ஓபன் எராவில், தனது முதல் 9 ஹாா்டு கோா்ட் இறுதிச்சுற்றுகளிலுமே சாம்பியனான முதல் வீராங்கனை என்ற பெருமையை கௌஃப் பெற்றுள்ளாா்.
சாம்பியனான கௌஃபுக்கு 1000 தரவரிசை புள்ளிகளும், சுமாா் ரூ.5.30 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தன.
இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஸ்டோா்ம் ஹன்டா்/செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா இணை சாம்பியன் ஆனது.
இறுதிச்சுற்றில், ஹன்டா்/சினியகோவா ஜோடி 6-3, 6-2 என்ற நோ் செட்களில், கஜகஸ்தானின் அனா டேனிலினா/சொ்பியாவின் அலெக்ஸாண்ட்ரா குருனிச் கூட்டணியை வீழ்த்தியத