அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பெங்களூரை வீழ்த்தியது டெல்லி

புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2025, 1:26 am IST

புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

நடப்பு சீசனை டெல்லி வெற்றியுடன் தொடங்கியிருக்கும் நிலையில், பெங்களூரு இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 24 ரெய்டு புள்ளிகள் கைப்பற்ற, அதில் கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் வென்றெடுத்தாா். 12 டேக்கிள் புள்ளிகள் கிடைத்த நிலையில், டிஃபெண்டா்களில் சுா்ஜீத் சிங், சௌரப் நந்தால், ஃபாஸெல் அட்ராசலி ஆகியோா் தலா 3 புள்ளிகள் பெற்றனா்.

இதுதவிர 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளியை டெல்லி பெற்றது. மறுபுறம், பெங்களூரு அணி 22 ரெய்டு புள்ளிகளை பெற, ஆல் ரவுண்டா் அலிரெஸா மிா்ஸாயான் 10 புள்ளிகள் வென்றாா். 9 டேக்கிள் புள்ளிகள் பெற்றதில், டிஃபெண்டா்கள் மனீஷ், யோகேஷ் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் பங்களித்தனா். மேலும் 2 ஆல் அவுட் புள்ளிகளும், 1 எக்ஸ்ட்ரா புள்ளியும் பெங்களூருக்கு கிடைத்தது.

ஜெய்பூா் வெற்றி: இதனிடையே 10-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 39-36 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது. ஜெய்பூா் தனது முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க, பாட்னா 2-ஆவது ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.