உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?

யுஎஸ் ஓபன் அரையிறுதில் வென்ற சின்னர் குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் யானிக் சின்னர். - படம்: ஏபி

Updated On :6 செப்டம்பர் 2025, 4:11 pm IST

யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதில் யானிக் சின்னர் வென்று இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் சின்னர் மோதவிருக்கிறார்.

இறுதிப் போட்டியில் அல்கராஸ் - சின்னர்

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் யுஎஸ் ஓபனில் அரையிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னரும் கனடாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிமும் மோதினார்கள்.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சின்னர் 6-1, 3-6, 6-3, 6-4 என்ற செட்களில் வென்றார்.

இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்கராஸுடன் சின்னர் மோதவிருக்கிறார்.

இருவரும் இதுவரை 14 முறை மோதிக்கொண்டதில் சின்னர் 5 முறையும் அல்கராஸ் 9 முறையும் வென்றுள்ளார்.

சாதனை படைப்பாரா சின்னர்?

தொடர்ச்சியாக ஐந்தாவது கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு சின்னருக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக ரோஜர் பெடரர் 2004- 2008 வரை தொடர்ச்சியாக 5 கிராண்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்றுள்ளார்.

27-0

யானிக் சின்னர் ஹார்டு கோர்ட் எனப்படும் கடின தரை போட்டிகளில் 27 -0 என அசத்தலாக வென்றுள்ளார். மேலும், 34 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 33-இல் வென்று ஆதிக்கத்துடன் இருக்கிறார்.

Jannik Sinner took a medical timeout because of a bothersome abdominal muscle during a mid-match lull before retaking control for a 6-1, 3-6, 6-3, 6-4 victory over Felix Auger-Aliassime in the U.S.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.