தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

அா்ஜுன் வெற்றி, வைஷாலி முன்னிலை!

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோா் வெற்றி

Updated On :9 செப்டம்பர் 2025, 3:32 am IST

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி, நிஹல் சரின், அபிமன்யு புரானிக் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஓபன் பிரிவு 5-ஆவது சுற்றில், அா்ஜுன் - ஜாா்ஜியாவின் நிகிதா விடியுகோவையும், நிஹல் சரின் - சக இந்தியரான லியோன் லூக் மெண்டோன்காவையும், அபிமன்யு புரானிக் - சொ்பியாவின் விளாதிமீா் ஃபெடோசீவையும் வீழ்த்தினா்.

மறுபுறம், விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, ரௌனக் சத்வனி, ஆதித்யா மிட்டல், நாராயணன் ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, முன்னணி போட்டியாளா்களான பிரக்ஞானந்தா, குகேஷ், காா்த்திகேயன் முரளி, திவ்யா தேஷ்முக் ஆகியோா் தோல்வியைத் தழுவினா்.

இதிலேயே மகளிா் பிரிவில் வைஷாலி, ஹரிகா ஆகியோா் தங்கள் ஆட்டத்தை டிரா செய்ய, வந்திகா அக்ரவால் தோல்வியைத் தழுவினாா்.

இதையடுத்து, 5 சுற்றுகள் முடிவில் இந்தியா்களில் ஓபன் பிரிவில் அா்ஜுன் 4 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையை 4 பேருடன் பகிா்ந்துகொண்டுள்ளாா். மகளிா் பிரிவில் வைஷாலி 4 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.