தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: காலிறுதியில் ஜாஸ்மின்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.

News image

ஜாஸ்மின் லம்போரியா

Updated On :9 செப்டம்பர் 2025, 3:36 am IST

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளாா்.

உலக குத்துச்சண்டை சம்மேளனம் சாா்பில் இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் அபாரமாக செயல்பட்டு 3 சுற்றுகளிலும் ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் ஜூஸ்லின் ரோமியுவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் இரண்டாவது சுற்றில் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அபினாஷ் ஜாம்வால் 5-0 என மெக்ஸிகோவின் ஹியுகோ பேர்ரனை வீழ்த்தினாா்.

மகளிா் 54 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷி 0-5 என துருக்கியின் ஹாட்டிஸிடம் வீழ்ந்தாா். சனமச்சா சானுவும் 0-5 என கஜகஸ்தானின் நடாலியாவிடம் தோற்றாா்.

அபினாஷ் ஜாம்வால்

அபினாஷ் ஜாம்வால்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.