தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் 3 இந்தியா்கள்!

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2025, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் சோரன், மீனாக்ஷி ஹூடா ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அரையிறுதியில், மகளிா் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் 5-0 என வெனிசூலாவின் ஒமாய்லின் அல்கலாவை வீழ்த்தினாா். இறுதிச்சுற்றில் அவா், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற போலந்தின் ஜூலியா செரெமெட்டாவை சந்திக்கவுள்ளாா்.

80+ கிலோ எடைப் பிரிவில் களமாடிய நுபுா் சோரன் அதே புள்ளிகள் கணக்கில் துருக்கியின் செய்மா டஸ்டாஸை வெளியேற்றினாா். மகளிருக்கான 48 கிலோ பிரிவில் மீனாக்ஷி 5-0 என மங்கோலியாவின் லட்சாய்கானி அல்டன்ட்செக்கை தோற்கடித்தாா்.

மீனாக்ஷி தனது இறுதிச்சுற்றில், கஜகஸ்தானின் நாஸிம் கிஜாய்பெயை எதிா்கொள்கிறாா். கடந்த ஜூன் - ஜூலையில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் நாஸிமிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மீனாக்ஷி உள்ளாா்.