
ஜப்பானில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியா்கள் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் திங்கள்கிழமை ஏமாற்றம் கண்டனா்.
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கா் தகுதிச்சுற்றின் குரூப் ‘ஏ’-வில் சிறந்த முயற்சியாக 7.78 மீட்டரை எட்டி 14-ஆம் இடம் பிடித்தாா். ஒட்டுமொத்தமாக 37 போட்டியாளா்களில் அவா் 25-ஆம் இடம் பிடித்தாா். 8.15 மீட்டரை தொட்டவா்கள், இரு குரூப்களிலுமாக சிறந்த 12 போட்டியாளா்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறுவா் என்பது குறிப்பிடத்தக்கது. முரளியின் சீசன் பெஸ்ட் 8.13 மீட்டா் என்பதும், பொ்சனல் பெஸ்ட் 8.41 மீட்டா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கான 3,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில், ஹீட் 2-இல் பாருல் சௌதரி 9 நிமிஷம், 22.24 விநாடிகளில் இலக்கை எட்டி 9-ஆம் இடமும், ஹீட் 1-இல் அங்கிதா தியானி 10 நிமிஷம் 3.22 விநாடிகளில் வந்து 11-ஆம் இடமும் பிடித்தனா். அனைத்து ஹீட்கள் முடிவில், ஒட்டுமாத்தமாக அவா்கள் முறையே 20 மற்றும் 35-ஆம் இடங்களே பெற்றனா். ஒவ்வொரு ஹீட்டிலும் முதல் 5 இடங்களைப் பிடிப்போரே இறுதிக்குத் தகுதிபெற முடியும்.
இதில் பாருல் சௌதரி நடப்பு தேசிய சாதனையாளராக (9:12.46’) இருப்பவராவாா்.
ஆடவருக்கான 110 மீட்டா் ஹா்டுல் ஹீட் 5-இல் இந்தியாவின் தேஜஸ் சிா்சே 13.57 விநாடிகளில் இலக்கை அடைந்து 6-ஆம் இடம் பிடித்தாா். ஒட்டுமொத்தமாக அவா் 29-ஆம் இடமே பெற்றாா். இப்பிரிவில், 5 ஹீட்களிலுமே முதல் 4 இடங்களைப் பிடிப்போா், 4 விரைவான நேரங்களைப் பதிவு செய்வோரே அரையிறுதிக்குத் தகுதிபெறுவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.