உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

இன்டர் மியாமியின் அசத்தல் வெற்றி குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி... - படம்: ஏபி

Updated On :17 செப்டம்பர் 2025, 3:50 pm IST

இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது.

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த அணியிடம்தான் இன்டர் மியாமி 0-3 என தோற்றது குறிப்பிடத்தக்கது.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி

எம்எல்எஸ் தொடர்ல் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியுடன் இன்று அதிகாலை மோதின.

இந்தப் போட்டியில் 12-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி உதவியால் ஜோர்டி ஆல்பா கோல் அடித்தார். அடுத்து 41-ஆவது நிமிஷத்தில் ஆல்பா உதவியால் மெஸ்ஸி கோல் அடித்தார்.

52-ஆவது நிமிஷத்தில் டீ பால் உதவியால் ஐயான் ப்ரை கோல் அடிக்க, இண்டர் மியாமி 3-0 என முன்னிலை பெற்றது.

கடைசி வரை போராடிய சியாட்டல் அணி 69-ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது

மெஸ்ஸி ஆட்ட நாயகன்

சிறப்பாக விளையாடிய மெஸிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

இந்த சீசனில் மெஸ்ஸி 20 போட்டிகளில் 21 கோல்கள் அடித்து அசத்தியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

சியாட்டல் அணியுடன் லீக்ஸ் கோப்பையில் ஏற்பட்ட மோதலால் லூயிஸ் சௌரஸ் 3 எம்எல்எஸ் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 27 போட்டிகளில் 49 புள்ளிகளுடன் இன்டர் மியாமி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.