புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஜெய்பூா் அணி 28 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் நிதின் குமாா் 13 புள்ளிகள் வென்றாா்.
மறுபுறம் பெங்கால் அணி 29 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் தேவங்க் 16 புள்ளிகள் கைப்பற்றினாா்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் புணேரி பால்டன் 40-22 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை சாய்த்தது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜெய்பூா் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், பெங்கால் 4 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும் உள்ளன. புணேரி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பா 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் இருக்கின்றன.
தொடர்புடையது

லீட்ஸிடம் வீழ்ந்தது மான்செஸ்டா் யுனைடெட்

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!

ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி!

தேசிய சீனியா் ஆடவா் கபடி: தமிழகம், தில்லி தொடா் வெற்றி!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


