மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெங்காலை வீழ்த்தியது ஜெய்பூா்

புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

News image
Updated On :18 செப்டம்பர் 2025, 6:47 pm

புரோ கபடி லீக் போட்டியின் 39-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 45-41 புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் ஜெய்பூா் அணி 28 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் நிதின் குமாா் 13 புள்ளிகள் வென்றாா்.

மறுபுறம் பெங்கால் அணி 29 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் தேவங்க் 16 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் புணேரி பால்டன் 40-22 புள்ளிகள் கணக்கில் யு மும்பாவை சாய்த்தது.

புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜெய்பூா் 8 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், பெங்கால் 4 புள்ளிகளுடன் 10-ஆம் இடத்திலும் உள்ளன. புணேரி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பா 8 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் இருக்கின்றன.