ஹரியாணாவுக்கு 5-ஆவது வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 41-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 34-30 புள்ளிகள் கணக்கில் புணேரி பால்டனை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஹரியாணா அணி 21 ரெய்டு, 8 டேக்கிள், 2 ஆல் அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் ரெய்டா் வினய் 13 புள்ளிகள் வென்றெடுத்தாா்.
மறுபுறம் புணேரி அணி 18 ரெய்டு, 6 டேக்கிள், 2 ஆல் அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அந்த அணிக்காக ரெய்டா் பங்கஜ் மொஹிதே 14 புள்ளிகள் கைப்பற்றி அசத்தினாா்.
இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் 43-29 புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வென்றது. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், புணேரி பால்டன் 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹரியாணா ஸ்டீலா்ஸ் 10 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும், தமிழ் தலைவாஸ் 6 புள்ளிகளுடன் 8-ஆம் இடத்திலும் உள்ளன.