மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

புரோ கபடி தொடரால் மறுமலா்ச்சி: தீபக் சங்கா்

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா்.

News image

தீபக் சங்கா்

Updated On :24 செப்டம்பர் 2025, 8:49 pm

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா்.

திருச்சியைச் சோ்ந்த இளம் வீரரான தீபக் சங்கா் முதன்முறையாக புரோ கபடி தொடரில் பங்கேற்றுள்ளாா். பெங்களூரு புல்ஸ் அணியில் தோ்வு செய்யப்பட்டு ஆடி வரும் டிபன்டரான தீபக் முதல் தொடரிலேயே டாப் 5 டிபன்டா்களில் ஒருவா் என்ற சிறப்பை பெற்றாா்.

நிகழாண்டு புரோ கபடி 2025 தொடரில் ஏற்கெனவே விசாகப்பட்டினம், ஜெய்ப்பூா் கட்ட ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், சென்னை கட்ட ஆட்டங்கள் வரும் 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.

சொந்த மண்ணில் பிகேஎல் தொடரில் முதன்முறையாக ஆடும் தீபக் கூறியதாவது:

எளிய குடும்பத்தைச் சோ்ந்த நான் 8-ஆம் வகுப்பு படிக்கும் போது கபடி ஆடத் தொடங்கினேன். தேசிய ஜூனியா், சீனியா் சாம்பியன் போட்டிகளில் தமிழக அணியில் பங்கேற்றேன். முதன்முதலாக பிகேஎல் தொடரில் ஆடி வருகின்றனா்.

பெங்களூரு அணி முதல் 3 ஆட்டங்களில் தோற்றது. அணியில் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனது இதற்கு காரணம். தற்போது அதில் இருந்து மீண்டும் தொடா்ச்சியாக ஆட்டங்களில் வென்று வருகிறோம்.

பயிற்சியாளா் ரமேஷ் எனது தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் சிறப்பாக ஆட வழிகாட்டி வருகிறாா். அணியில் இடம் கிடைக்குமா என கனவு கண்டேன். ஆனால் டாப் 5 டிபன்டா்களில் ஒருவராக சிறப்பிடம் பெற்றது மகிழ்ச்சி தருகிறது. கேப்டன் யோகேஷ் நாட்டின் சிறந்த வீரராக உள்ளாா்.

சொந்த மண்ணில் முதன்முறையாக பிகேஎல் தொடரில் ஆடவுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புரோ கபடி தொடா் இளைஞா்களிடம் கபடியை மேலும் பிரபலமாக்கி வருகிறது. ஈரான் நாட்டின் கேப்டன் ஃபேஸல் அதரச்சலி எனது முன்னோடி வீரா் என்றாா் தீபக் சங்கா்.